தமிழ்நாடு
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்... அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்... அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்குப் பேட்டி அளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்போம் என்று கூறினார். பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு அளிக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.