ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தீபா

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தீபா

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தீபா
Published on

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கியதோடு பின்னர் அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார் தீபா.

பின்னர் பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறினார். மக்கள் விரும்பியதால் அரசியலுக்கு வந்ததாக கூறிய அவர், தனக்கு ஆதரவளித்து வரும் மக்களுக்கும் தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் மறைவால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com