வெளிநாட்டு விமான பயணத்திற்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்தும், சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா கண்காணிப்பு பணிகள் குறித்தும் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் சரத்குமார், “விமான நிலையத்தில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, பயணிகள் சிரமப்படாதவாறு திட்டமிட்டு கொரோனா பரிசோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுப்பதற்கு கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், குறைக்க வலியுறுத்தி பயணிகளிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, ரேபிட் பரிசோதனை கட்டணத் தொகை 3,400 ரூபாயிலிருந்து 2,900 என குறைக்கப்பட்டுள்ளது.