ஹாயாக சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

தமிழக ஆந்திர எல்லையோரம்; குடியாத்தம்- பலமனேரி சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
wild elephant
wild elephantpt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தின் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்ததுள்ளது சைணகுண்டா சோதனை சாவடி. இந்த சோதனைச் சாவடி அருகே ஆந்திர எல்லை பகுதியான மொசலமடுகு பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றன. அப்போது குடியாத்தம் - பலமனேரி சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி தங்கள் செல்போனில் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

elephant
elephantpt desk

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும், வனத் துறையினர், யானைகளை சாலைக்கு வரவிடாமல் காட்டுக்குள் விரட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com