இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..!

இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..!
இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..!

சாலை விபத்தில் உயிரிழந்தவர் தன் கணவர் என்பது தெரியாமலே செவிலியர் ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி, ஓமலூர் அரசு மருத்தவமனையில் செவிலியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். காலை சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து விட்டார். இதனைத்தொடர்ந்து சீனிவாசன் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மதியம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று அதிவேகமாக வந்து சாலையோரத்தில் நின்றிருந்த சீனிவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் ரத்தம் சொட்டிய நிலையில் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனையில் சீனிவாசனுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலி சிவகாமி ஆகியோர் முதலுதவி சிகிச்சையளித்தனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது முகம் முழுக்க ரத்தம் படிந்து இருந்ததால் அடிபட்டவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து செவிலி சிவகாமி சீனிவாசன் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்தார். அப்போது தான் இறந்துள்ளது தனது கணவர் என்பது செவிலிக்கு தெரிய வந்தது. தனது கணவர் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சிவகாமி கணவரின் உடலை கட்டியணைத்து கண்ணீர் விட்டு கதறியழுதார். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com