''மனைவி பிரிந்து சென்றுவிட்டார்'' - வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்!

''மனைவி பிரிந்து சென்றுவிட்டார்'' - வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்!
''மனைவி பிரிந்து சென்றுவிட்டார்'' - வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்!

திருமணமான 2 மாதத்தில் மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்த அஜய்குமார் (30). இவரும் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவும் காதலித்து
வந்துள்ளனர். கடந்த மே மாதம் 8-ம் தேதி, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து,
கீழ்மொணவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் அஜய்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சமீபத்தில் அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதனால், அர்ச்சனா தாய் வீட்டில் ஓய்வெடுக்கச் செல்வதாக சென்றூவிட்டார். தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அஜய்குமார் சென்று அழைத்துள்ளார்.

ஆனால் அர்ச்சனா வரமறுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அஜய்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு செய்த அவர் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அதனை அனுப்பியுள்ளார். அஜய்குமாரின் வீடியோவைக் கண்ட உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் அஜய்குமார் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com