தகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.!

தகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.!
தகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.!

தகாத உறவால் கணவனை கொன்ற பெண் தனது இரண்டரை வயது குழந்தையையும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். 

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை அருகே உள்ள ‘முஷ்ரூம் ஹட்’ என்ற ரிசார்ட்டில் பணியாற்றி வந்த புத்தடி பகுதியை சேர்ந்த ரிஜோஷ் (31) என்பவர் கடந்த 31ஆம் தேதி காணாமல் போனார். ஐந்து நாட்கள் கழித்து ரிஜோஷின் மனைவியான லிஜி (29), தனது இரண்டரை வயது மகள் ஜோவனாவுடன் காணாமல் போனார். அதே நாளில் ரிசார்ட் மேலாளராக இருந்த வாசிம் அப்துல்காதார் (29) என்பவரும் தலைமறைவானார். இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ரிசார்ட் மேலாளருக்கும், லிஜிக்கும் தகாத உறவு என 
போலீஸார் உறுதிப்படுத்தினர். 

தகவல்களின் படி ரிசார்ட்டின் பின்புறம் தோண்டிப்பார்க்க, சாக்கு மூட்டையில் கட்டி புதைக்கப்பட்ட ரிஜோஷின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் கணவரான ரிஜோஷை தகாத உறவு காதலருடன் இணைந்து மனைவியே கொலை செய்து புதைத்தது அறியப்பட்டது. அத்துடன் தலைமறைவான ரிஜோஷின் மனைவி லிஜியும், அவருடன் சென்ற வாசிமும் மும்பையில் உள்ள ஒரு விடுதியில் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே இருவரும் சேர்ந்து தங்களுடன் அழைத்துச்சென்ற இரண்டரை வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் உடல் தற்போது மும்பையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. விஷம் குடித்த லிஜி மற்றும் வாசிம் ஆகிய இருவரும் மருத்துவ சிகிச்சைப்பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன் தந்தை ரிஜோஷ் கடைசியாக எடுத்த புகைப்படம் போலீஸ் தரப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது. இறந்த குழந்தை, ரிஜோஷ் மற்றும் லிஜிக்கு பிறந்த மூன்றாவது குழந்தையாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com