மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !

மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !

மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !
Published on

ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகின. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதீஸ்வரனும், கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞர் பிரியாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்த பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மதீஸ்வரனிடம் இருக்கும் தனது மகளை பெற்றுத்தரக்கோரி, காவல் நிலையத்தில் பிரியா புகார் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கேரளா திரும்ப ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பிரியாவை சந்தித்துப் பேசிய மதீஸ்வரன், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரியா மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com