சேலையூர்: கணவர் இறந்தசோகத்தில் மனைவி தற்கொலை; ஆதரவற்றுப்போன குழந்தைகள்

சேலையூர்: கணவர் இறந்தசோகத்தில் மனைவி தற்கொலை; ஆதரவற்றுப்போன குழந்தைகள்
சேலையூர்: கணவர் இறந்தசோகத்தில் மனைவி தற்கொலை; ஆதரவற்றுப்போன குழந்தைகள்

சேலையூரில் கணவன் சாலை விபத்தில் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் உணவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், அம்பேத்கர் நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர்கள் நிதா(34) - மனோஜ் குமார்(36) தம்பதியினர். இவர்களுக்கு யோகேஷ்(9), கனிஷ்கா(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பணிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மனோஜ்குமார் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவதியடைந்து வந்த மனைவி நிதா, நேற்றிரவு உணவு சமைத்து அதில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் உண்டுள்ளார்.

இதனால் சிறிது நேரத்தில் நிதா வாந்தி எடுக்கவே மகன் யோகேஷ் பெரியப்பாவிற்கு செல்போனில் விவரத்தை சொல்ல, பெரியப்பா வந்து அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மிகவும் ஆபத்தான நிலையில் நிதா இருந்ததால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

குழந்தைகள் இருவரையும் எழும்பூரில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கணவரை இழந்த நிலையில், வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்து குழந்தைகளோடு விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் மனைவி மட்டும் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com