தமிழகத்தில் போலீசே விநாயகர் சிலைகளை தூக்கிச் செல்வது போலீஸ் அராஜகத்தின் உச்சகட்டம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டியளித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசும்போது "இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக போலீசார் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 27 சதவீதம் ஒதுக்கிய மோடி பிறந்த செப்டம்பா 17ம் தேதிதான் உண்மையான சமூகநீதி நாள்.
தமிழக கவர்னர் நியமனத்தை தமிழக முதல்வரே வரவேற்றுள்ளார் என்ற எச்.ராஜா, திருடனுக்கு தேள் கொட்டியது போல் காங்கிரஸ் கட்சி தலைவர் கே..எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.