“நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்க கூடாது ?” - நீதிபதிகள் கேள்வி

“நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்க கூடாது ?” - நீதிபதிகள் கேள்வி

“நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்க கூடாது ?” - நீதிபதிகள் கேள்வி
Published on

ஓராண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்க கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்க்கல்வித்துறை செயலர், உயர்க்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் எனக் கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. 

சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டும் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பாக 164 வரைமுறையின் வாக்குமூலம் பெறப்படவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ஓராண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்க கூடாது? அவ்வாறு ஜாமீன் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து, உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையிலேயே, கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை அதிகாரியான  சிபிசிஐடி எஸ்.பியிடம் சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com