குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது யார்? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது யார்? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை
குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது யார்? போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கனிமொழியை நேற்று மாலை சிறுவளையம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார் ஆறுமுகம். இந்த தம்பதிக்கு ஏற்கெனவெ ஒன்றரை வயது குழந்தை இருந்தது.  

இந்நிலையில் நேற்று இரவு கனிமொழி தனது தாய் வீட்டில், அம்மா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தி மற்றும் அக்கா குழந்தைகளுடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது கனிமொழியின் குழந்தை தலையில் யாரோ கல்லை போட்டு தாக்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு எழுந்த கனிமொழி மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் குழந்தை இறந்த மர்மம் குறித்து அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தையின் தலையில் கல்லை போட்டது யார்? என்று உறவினர்கள் அனைவரையும் நெமிலி காவல் நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com