மைசூர்பாகு தமிழகத்து கண்டுபிடிப்பா?  சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை

மைசூர்பாகு தமிழகத்து கண்டுபிடிப்பா? சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை

மைசூர்பாகு தமிழகத்து கண்டுபிடிப்பா? சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை
Published on

இனிப்பு பண்டமான ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்ற ஒடிஷாவுடனான உரிமை போராட்டத்தில் பங்களார் ரசகுல்லா மேற்கு வங்கத்தை சேர்ந்தது என புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தென்மாநில மக்கள் அதிகம் சுவைக்கும் மைசூர்பாகு, தமிழகத்துக்கு சொந்தமா? அல்லது கர்நாடகாவுக்கு சொந்தமா? என்ற சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அதிகாரியாக இருந்த மெக்காலே மைசூர்பாகை கண்டுபிடித்தவர்கள் மதராசிலுள்ள தமிழர்கள் என தெரிவித்துள்ளார். 74 ஆண்டுகளுக்கு முன், மதராசில் இருந்து இந்த இனிப்பு பண்டத்தை தயாரிக்கும் வழியை அறிந்த கர்நாடக நீதிபதி ஒருவர் அதை மைசூர் மன்னரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே இந்த இனிப்பு பண்டத்துக்கு மைசூர்பாகு என பெயர் வந்ததாக சமூக வலைதளங்களில் சான்றுகளுடன் தமிழர்கள் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் இந்த வாதத்தை மைசூர் மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.

மைசூருவில் நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஆட்சிக் காலத்தில், அரண்மனை சமையல்காரராக இருந்த ககசுர மாதப்பா என்பவர்தான் இந்த இனிப்பு பண்டத்தை கண்டுபிடித்து அதற்கு மைசூரு பாகு என பெயரிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மைசூரு பாகு யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை தற்போது பெரிதாக வெடித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com