நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் எங்கே?: அறிக்கை கேட்கும் நீதிமன்றம்..!

நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் எங்கே?: அறிக்கை கேட்கும் நீதிமன்றம்..!
நித்யானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் எங்கே?: அறிக்கை கேட்கும் நீதிமன்றம்..!

நித்யானந்தா கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண்கள் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் காவல்துறைக்கு அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்தி சென்றுவிட்டதாக அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்து வரும் அகமதாபாத் உயர்நீதிமன்றம், ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்? என்றும், அவர்கள் தங்கியுள்ள நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com