\

மக்களைச் சந்திப்பது எப்போது? மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மக்களைச் சந்திப்பது எப்போது? மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
Published on

சசிகலா நியமனம் குறித்து, தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனு மீது, நல்ல பதில் வரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு பிறகே தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திப்பதற்கான பயணம் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com