தமிழகத்தில் புறநகர் ரயில் சேவை எப்போது? - தென்னக ரயில்வே பொதுமேலாளர் விளக்கம்

தமிழகத்தில் புறநகர் ரயில் சேவை எப்போது? - தென்னக ரயில்வே பொதுமேலாளர் விளக்கம்
தமிழகத்தில் புறநகர் ரயில் சேவை எப்போது? - தென்னக ரயில்வே பொதுமேலாளர் விளக்கம்

புறநகர் நகர் ரயில் சேவையை மீண்டும் துவங்குவதில் தமிழக அரசு எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என தென்னக ரயில்வே பொது மேலாளர் தாமஸ் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கினால் தமிழகத்தில் புறநகர் ரயில் சேவை தொடங்கும். நாடு முழுவதுமே தற்போது வரை புறநகர் ரயில் சேவைகளின் இயக்கம் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கவில்லை.

முற்றிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யும் ரயில்களுக்கு மட்டுமே முதற் கட்டமாக ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை செய்து புறநகர் ரயில் சேவைகளை துவங்குவதற்கான அனுமதியை வழங்கும். புறநகர் நகர் ரயில் சேவையை மீண்டும் துவங்குவதில் தமிழக அரசு எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது வழித்தடம் அமைக்கும் பணி மார்ச் மாதத்தில் நிறைவடையும். அதன் பிறகு மேலும் அதிகமான புறநகர் ரயில் சேவைகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com