தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு - முழுவிபரம்

தமிழ்நாட்டில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை புதன் கிழமைக்கு ஒத்திவைத்து தமிழ்நாடு அரசு உத்தரவினை வழங்கியுள்ளது. மேலும், பாடப் புத்தங்கள் இழந்த மாணவர்களுக்கு அவற்றை செவ்வாய் கிழமை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!புதிய தலைமுறை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் தாக்கமானது பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரையிலும் பாதிக்கப்பட்ட பல இடங்கள் மெதுவாக இயல்பு நிலையை அடைந்து வருகின்றது. எனவே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை பொது விடுமுறையானது வழங்கப்பட்டு இருந்தது.

இந்தவகையில், ஏற்கெனவே, 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ” மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை - 11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை - 12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே, 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com