தமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி..? நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்
தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 1 - கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2 - தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,
மண்டலம் 3 - விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி,
மண்டலம் 4 - நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,
மண்டலம் 5 - திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,
மண்டலம் 6 - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி,
மண்டலம் 7 - காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,
மண்டலம் 8 - சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
*இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்க தடை தொடர்கிறது. இவை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
*அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி.
*பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் 60 % இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
*மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இபாஸ் தேவை இல்லை. பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் இபாஸ் அவசியமில்லை.
*அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
* அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும்.