”புதுச்சேரியில் நுழைந்து விட்டோம்; தமிழகத்திலும் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம்” : அண்ணாமலை

”புதுச்சேரியில் நுழைந்து விட்டோம்; தமிழகத்திலும் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம்” : அண்ணாமலை
”புதுச்சேரியில் நுழைந்து விட்டோம்; தமிழகத்திலும் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம்” : அண்ணாமலை

நீட் மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்பிய கோப்பில் என்ன விபரங்கள் உள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை., கடந்த 1ஆம் தேதி கோப்புகள் ஆளுநர், சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்த கோப்புகள் குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார் மேலும் அந்த கோப்பில் உள்ள முழு விபரங்களை வெள்ளை அறிக்கையாக மாநில அரசு வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாகவும் அவர் விமர்சித்தார். மேலும் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. ஆளுநர் கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு கூட்டம் நடத்தினால் முதல் கட்சியாக பாஜக பங்கேற்கும் என்று தெரிவித்தார்

பிப் 2-ல் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் ஆளுநருக்கு எதிராக பேசியுள்ளனர். பிப்.1ஆம் தேதியே மசோதாவை நிராகரித்து ஆளுநர் திருப்பி அனுப்பியது கூட தெரியாமல் எம்பிக்கள் அங்கு பேசியுள்ளனர். 3 ஆம் தேதி ஆளுநர் கூறிய பிறகுதான் தெரியவந்துள்ளது. நடப்பது ஆட்சியா..சினிமா காட்சியா? நாளை அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் நீட்டை நிறுத்த வித்தியாசமாக ஏதாவது கூறினால் நன்றாக இருக்கும்.

அடுத்த தேர்தலில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல், அதனால்தான் நாடாளுமன்றத்தில் தமிழகம் பற்றி பேசியுள்ளார். ராகுல் தமிழகம் குறித்தும், பாஜக குறித்து பேசியதை வரவேற்கிறோம், ராகுல் ஜாதகப்படி அவர் சொன்னதெற்கெல்லாம் எதிராக நடக்கும். புதுச்சேரியில் நுழைந்து விட்டோம், எனவே தமிழகத்தில் கண்டிப்பாக பாஐக ஆட்சி அமைக்கும்.

நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இறுதியாக பேசும்போது ராகுல் பேச்சுக்கு பதில் கொடுத்துவிடுவார். 12 முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து கடிதம் எழுதினார், யாராவது ஒருவர் மதித்து பதிலளித்தார்களா? அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 வேண்டும் என்று முதன் முதலில் சொன்னது பாஜக தலைவர் ஜே.பி.நட்டாதான்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com