தோழிகளுடன் கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

தோழிகளுடன் கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

தோழிகளுடன் கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

சாத்தூர் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20) இவர், சரிதா (21) மனோரஞ்சனி (18) மற்றும் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் சேர்ந்து, நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்குச் சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில்; குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போத ஆங்கே குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த கிராமத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது அபிநயா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் சரிதாவை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் மனோரஞ்சனியை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து அபிநயா உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com