ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்

ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்

ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிப்போம்: ரசிகர்கள் ஆவேசம்
Published on

ரஜினியுடன் புகைப்படம் எடுப்பதற்காக அடையாள அட்டை வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலையிட்டு பிரச்சனையை தீர்க்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு 100 பேர் தீக்குளிப்போம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இன்று முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னையில் ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவெடுத்துள்ளார். ரஜினியை சந்திக்க வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிளைப்பாளர் ரஜினி செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏரளாமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரஜினியை சந்திப்பதற்காக சேலம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட கூப்பன்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும், உண்மையான ரசிகர்களுக்கு அனுப்பட்ட கூப்பன்களை, 3 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், பிரச்சனையை ரஜினி தலையிட்டு சரிசெய்யாவிட்டால் அவர் வீட்டின் முன்பு தீக்குளிப்போம் என்றும் ரசிகர்கள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com