"60 ஆண்டுகளாக ஏமாற்றியவர்களை, பணத்தை வாங்கிக் கொண்டு நாம் ஏமாற்ற வேண்டும்" - சீமான்

"60 ஆண்டுகளாக ஏமாற்றியவர்களை, பணத்தை வாங்கிக் கொண்டு நாம் ஏமாற்ற வேண்டும்" - சீமான்
"60 ஆண்டுகளாக ஏமாற்றியவர்களை, பணத்தை வாங்கிக் கொண்டு நாம் ஏமாற்ற வேண்டும்" - சீமான்

60 ஆண்டுகளாக ஏமாற்றியவர்களை ஒருமுறை பணத்தை வாங்கிக் கொண்டு நாம் ஏமாற்றிட வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் பேசினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான இறுதி கட்ட பிரச்சாரம் 25 ஆம் தேதி மாலையுடன் நிறைவு பெற இருக்கிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி பிரபலங்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்லையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து கொல்லம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு பேசிய அவர்....

எங்களை விட்டால் இந்நாட்டில் உங்களை காப்பாற்ற யாருமில்லை, எல்லா உயிர்க்கும் அரசியல் செய்ய வந்துள்ளோம், இளையராஜாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மீது வன்கொடுமை வழக்கு போடாமல் என் மீது வன்கொடுமை வழக்கு போட்டுள்ளார்கள், நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை, உங்களுக்கு கீழே எந்த தாழ்ந்த சாதியும் இல்லை என்பதே எங்களின் கோட்பாடு.

60 ஆண்டுகளாக ஏமாற்றியவர்களை ஒருமுறை பணத்தை வாங்கிக் கொண்டு நாம் அவர்களை ஏமாற்றிட வேண்டும், நான் எதையும் இலவசமாக தரமாட்டேன், ஆனால், ஆகச் சிறந்த கல்வியை இலவசமாக தருவேன், ஒன்றாம் வகுப்பில் 6 வயதில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நான் 10 வருடமாக சொன்னதை இப்போது மத்திய அரசு சொல்கிறது, இருவரும் மாறி மாறி எய்ம்ஸ் பற்றி பேசாமல் இங்குள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்

நான் வென்றால் ரயில் ஏறி வந்த வட இந்தியன், அதே ரயில் மூலம் இங்கிருந்து வட இந்தியாவிற்கே திரும்பி செல்ல வைப்பேன். தேர்தலின் போது ஓட்டு கேட்க வரும் சிலர் மக்களை கட்டிபிடித்து கொஞ்சும் நிலையில் , பதவிக்கு வந்த பின்பு பாதுகாப்பு எனக் கூறி மக்களை விட்டு விலகி செல்வது வாடிக்கையாகி விட்டது. ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சாதனை என பெருமை பேசி கொள்வது திராவிட மாடல் ஆட்சி என்பதை தவிர வேறு எதுவுமில்லை. என்றுமே, சத்தியத்தை சத்தமாக பேச வேண்டும், உண்மையை உரக்க பேச வேண்டும், அதை உறுதியாக கடைசி வரை பேச வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் மீது கல், ஈட்டி மற்றும் குண்டு எறிந்தாலும் நாம் தமிழர் கட்சி அஞ்சாமல் தேர்தல் களத்தில் நின்று பணியாற்றும். 50 ஆண்டுகள் திமுக அதிமுக எதுவும் செய்யாத நிலை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றால் மட்டும் இன்னும் மூன்று ஆண்டுகளில் என்ன செய்து விடப் போகிறார். 5-ஜி, 10-ஜி வந்தாலும் உயிருடன் வாழ கஞ்சி வேண்டும், அந்த கஞ்சிக்கு விவசாயி நலமுடன் இருக்க வேண்டும், திமுகவுக்கு எதிர்கட்சி அதிமுக அல்ல, அதிமுகவிற்கு எதிர்கட்சி திமுக அல்ல, பாஜகவிற்கு எதிர்கட்சி காங்கிரஸ் அல்ல, காங்கிரசுக்கு எதிர்கட்சி பாஜக அல்ல, இவர்களுக்கு எல்லாம் மாற்று எதிர்கட்சி நாம் தமிழர் கட்சி தான் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com