”ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” - ஜகி வாசுதேவ்

”ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” - ஜகி வாசுதேவ்
”ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” - ஜகி வாசுதேவ்

கோவையில் அமைந்துள்ள ஈஷா நிறுவனம், தனது ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஈஷா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று அதன் நிறுவனர் ஜகி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.

94 பேர் உயிரிழப்பு 

முன்னதாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஏற்கெனவே 4,206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதன் எண்ணிக்கை நேற்று 4,250 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 50 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 44 பேர் என மொத்தம் 94 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,07,145 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 13,625 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 9,76,876 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com