என்னை நீக்கிவிட்டு உன்னை பணியில் சேர்ப்பதா?: தாக்கப்பட்ட காவலாளி உயிரிழப்பு

என்னை நீக்கிவிட்டு உன்னை பணியில் சேர்ப்பதா?: தாக்கப்பட்ட காவலாளி உயிரிழப்பு

என்னை நீக்கிவிட்டு உன்னை பணியில் சேர்ப்பதா?: தாக்கப்பட்ட காவலாளி உயிரிழப்பு
Published on

சென்னையில் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணியாற்றியவர் சரவணன். இவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்கு பதில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரத்னகுமார் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கடந்த 20ஆம் தேதி மதுபோதையில் ரத்னகுமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், உருட்டுக் கட்டையால் ரத்னகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்னகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சரவணனை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்னகுமார் உயிரிழந்தார். இதனால் சரவணன் மீது பதியப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com