சென்னையில் கொரோனா மூன்றாவது அலை இம்மாத இறுதியில் பரவ ஆரம்பிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி 1,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே சென்னையில் விதிகளை மீறி மக்கள் கூடும் 9 இடங்களில் பத்து நாட்கள் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் அதிகம் கூடிய 7 டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.