வாக்கி டாக்கி முறைகேடு: டிஜிபி மீது ஐகோர்ட்டில் மனு!

வாக்கி டாக்கி முறைகேடு: டிஜிபி மீது ஐகோர்ட்டில் மனு!

வாக்கி டாக்கி முறைகேடு: டிஜிபி மீது ஐகோர்ட்டில் மனு!
Published on

வாக்கி டாக்கி வாங்கும் முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேல்முருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 2017-18ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி
ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரூ.83.45 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு
காட்டப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட வேண்டியதற்கு பதிலாக, 4000 வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமை செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான், தற்போது உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com