“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ

“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ
“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ

இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிந்த பின்புதான் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தபால் வாக்கு எண்ணிக்கை முடியாவிட்டாலும்,காலை 8.30 மணிக்கே மின்னணு வாக்குப்பதிவில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தபால் வாக்குகள் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஏதேனும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் எண்ணப்படும் என்றும் கூறியுள்ளார். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கே தொடங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுற்ற பின்னர், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என்றும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com