\
'பலமுறை மனு அளித்தும் வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை!' - இருளர் இன மக்கள் புகார்

'பலமுறை மனு அளித்தும் வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை!' - இருளர் இன மக்கள் புகார்

'பலமுறை மனு அளித்தும் வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை!' - இருளர் இன மக்கள் புகார்
Published on

100 சதவிகித வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் நிலையில், காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் இருளர் இனத்தைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலை நீடிக்கிறது.

காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் உள்ளன. இருளர் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆலைகளில் தங்கி வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த அடையாள அட்டைகளும் இல்லாத நிலையில், இதுவரை எந்தத் தேர்தலிலும் தாங்கள் வாக்களித்ததில்லை என்று கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என எனக் கூறும் இருளர் இன மக்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிபெற்றும் வாக்காளர் அட்டை வழங்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com