பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு அதிமுகவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் சசிகலா இன்று மேற்கொள்ளும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சசிகலா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதா பயன்படுத்திய பரப்புரை வாகனத்தில் பயணித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.