திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி

திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி

திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி
Published on

விழுப்புரத்தில் திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடி விட்டு சென்ற திருடனை கண்டுபிடித்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் பகுதியில் வசிப்பவர் ஆசிரியர் இளங்கோ. இவர் வீட்டில் அவ்வப்போது சிறு சிறு திருடுகள் நடந்துள்ளன. இதனால் திருடனை கையும், களவுமாக பிடிக்க சிசிடிவி கேமராவை பொருத்தினார். இந்நிலையில் கடந்த மாதம் இவரது வீட்டிற்கு திருட வந்த ஒரு திருடன், அங்கு கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் உல்லாசமாக அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் சென்றான். இதை சிசிடிவி காட்சிகளில் கண்ட இளங்கோ அதிர்ச்சி அடைந்தார்.

(திருட வந்தபோது பதிவாகியிருந்த வீடியோ)

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், திருட வந்தது விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருடனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com