பிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்

பிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்
பிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்

விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான தாதா மணி என்கிற மணிகண்டன் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி மணி மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மணி சென்னை கொரட்டூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க விழுப்புரம் போலீஸார் சென்றனர்.

அப்போது, பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ. பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் போலீஸார் மணியை துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி மணிகண்டர் மற்றும் ரவுடி பூபாலன் இடையேயான மோதலில் இதுவரை 21 கொலைகள் நடந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com