மெருகேற்றும் கல்
மெருகேற்றும் கல்pt desk

விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள மெருகேற்றும் கல்..!

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் 3,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்

இந்த அகழாய்வு பணியின் போது அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மெருகேற்றும் கல்
ஜிபிஎஸ் நோய் எவ்வாறு பரவுகிறது? உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்ற முடியுமா? - டீன் தேரணிராஜன்

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறியபோது, இந்த அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடும் கல்லை பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com