கல்லூரி மாணவி கத்தியால் கொல்லப்பட்ட விவகாரம் : இளைஞர் கைது

கல்லூரி மாணவி கத்தியால் கொல்லப்பட்ட விவகாரம் : இளைஞர் கைது

கல்லூரி மாணவி கத்தியால் கொல்லப்பட்ட விவகாரம் : இளைஞர் கைது
Published on

விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். 

வீட்டில் தனியாக இருந்த அவர், மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தன்னை யரோ கத்தியால் குத்திவிட்டதாக கூறி உதவிகேட்டார். இதனால் பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடிவந்த உறவினர் கஜேந்திரன் என்பவர், கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்த மாணவியை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில் பேரளையூரை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ஆகாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆகாஷ் மற்றும் திலகவதி பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். ஆகாஷ் பள்ளிக்கு பின்னர் வேலைக்கு சென்றுவிட திலகவதி கல்லூரி சென்றுவிட்டார். அதன்பின்னர் இவர்களது பேச்சுப் பழக்கம் தொலைபேசி மூலம் தொடர்ந்துள்ளது. சமீப காலமாக ஆகாஷ் போனை திலகவதி எடுக்காமல் இருந்தார் என தெரிகிறது. இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவியை ஆகாஷ் பின் தொடர்ந்து வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரிடம் பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியை கத்தியால் குத்திவிட்டு அவர் தப்பி ஓடியுள்ளார். அவர் வெளியூர் தப்பி செல்ல இருந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த உண்மைகள் காவல்துறையினர் ஆகாஷிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகாஷ் மற்றும் திலகவதி வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com