விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

செயல்படாத கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வரும் கிருபா என்பவரது மகள் களவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக பேரன் பேத்திகள் பாட்டி புஷ்பா வீட்டுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், பாட்டியுடன் சேர்ந்து மூன்று பேரும் செயல்படாத கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குட்டையில் மூழ்கி புஷ்பா (60) வினோதினி (16) ஷாலினி (14) கிருஷ்ணன் (8) உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com