3 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும், 1 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், மீதமுள்ளவர்கள் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உலகலாம்பூண்டி என்கிற ஊராட்சியில் போட்டியிடும் தமிழரசி என்கிற மாற்றுதிறனாளி பெண், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சக மாற்றுத்திறனாளிகளும் மூன்று சக்கர வாகனங்களில் சென்று வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தது கவனத்தை ஈர்த்தது.