மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. மாலை, மரியாதையுடன் இறுதிசடங்கு செய்த கிராம மக்கள்!

மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. மாலை, மரியாதையுடன் இறுதிசடங்கு செய்த கிராம மக்கள்!
மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. மாலை, மரியாதையுடன் இறுதிசடங்கு செய்த கிராம மக்கள்!

மொரப்பூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு, கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்து, மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த போடம்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியைவிட்டு ஏராளமான குரங்குகள் கிராமங்களை நோக்கி வந்துள்ளது. இங்கு குடியிருப்புகளில் நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது என பொதுமக்களை அச்சுறுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் சாலையோரம் இருக்கும் புளியமரம் மற்றும் மின்சார கம்பங்களில் ஏறி குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் மின்கம்பியில் விளையாடியபோது ஒரு குரங்கு மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டது. இதனால் படுகாயமடைந்த குரங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைக் கண்டு பரிதாபப்பட்ட கிராம மக்கள், குரங்குகள் தங்களை அச்சுறுத்தி வந்தாலும், உயிழந்த குரங்கிற்கு மனிதர்களுக்குச் செய்வதைப்போல் இறுதிச்சடங்குகள் செய்தனர். தென்னை ஓலையில் பாடை கட்டி, குளிப்பாட்டி, அலங்கரித்து, மாலை மரியாதை செலுத்தி, எடுத்துச்சென்று உடலை அடக்கம் செய்தனர். கிராம மக்களை குரங்குகள் அச்சுறுத்தி வந்தாலும், விபத்தில் இறந்த குரங்கிற்கு அவர்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com