அரியலூர்: இணைப்பு மேம்பாலம் கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்

அரியலூர்: இணைப்பு மேம்பாலம் கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்

அரியலூர்: இணைப்பு மேம்பாலம் கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்

அரியலூரில் வேம்புகுடி என்ற கிராமத்தில் இணைப்பு மேம்பாலம் அமைக்ககோரி, தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேம்புகுடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வேம்புகுடி கிராமத்தை இணைக்கும் கிராம சாலையில் பொதுமக்கள் சாலையை பாதுகாப்பாகக் கடக்கும் விதமாக புதிதாக இணைப்பு மேம்பாலம் அமைக்ககோரி, 4 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததது. இதில் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் சாலைப் பணிகள் நடைபெறும் இடம் முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அக்கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com