\
துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்

துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்

துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்
Published on
துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினார் விஜயகாந்த்.
தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் குமார் மற்றும் உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா இம்மாதம் 3-ம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றாா். கிகிச்சைக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் சத்ரியன் படம் பாா்த்து கொண்டிருப்பது போல புகைப்படம் வெளியானது.
தற்போது விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com