சாதாரண மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழலை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது - விஜயகாந்த்

சாதாரண மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழலை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது - விஜயகாந்த்

சாதாரண மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழலை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது - விஜயகாந்த்
Published on

சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜயகாந்த், ''தமிழக மாணவ மாணவியர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்களுக்கு தமிழக அரசு முறையான கூடுதல் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் நீர் தேர்வில் இன்னும் அதிகமாக சாதிப்பார்கள். தமிழக மாணவ மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த செயல் திட்டத்தையும் தேமுதிக ஏற்றுக்கொள்ளாது. தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்வி, ஒரே கேள்வித்தாள், ஒரே மாதிரியான மதிப்பீடு இருப்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். 

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு என்கின்ற செய்தி வந்த அதே நாளில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

எனவே இதனை அரசியலாக்காமல் மாணவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்தியா முழுவதும் ஒரே திட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு ஊக்கப்படுத்தினால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை இடத்துக்கு வந்து, அதிக மருத்துவர்கள் வருங்கால தமிழ்நாட்டில் வருவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com