செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு
செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்புpt web

பதற வைக்கும் காணொளிகள்.. கூட்டத்தில் நடந்தது என்ன? செய்தியாளர்களிடம் விளக்கும் அரசு

என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த தருணத்தைப் பார்த்ததில்லை என தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்,

கூட்டத்தில் நடந்தது என்ன?

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஏடிஜிபி டேவிட்சன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமுயா ஐஏஎஸ், "கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சில சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. எனவே, நிர்வாக ரீதியாக என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு..

விஜய் உரையாற்றியபோது மின்தடை ஏற்படவில்லை; கூட்டம் நடக்கும்போது மின்சாரத்தை நிறுத்துமாறு தவெகவினர் கேட்டுக்கொண்டனர். தொண்டர்கள் ஜெனரேட்டர் அறையில் புகுந்ததால்தான் மின்தடை ஏற்பட்டது

விஜய் வாகனம், ஆம்புலன்ஸ் செல்லவே போலீஸார் தொண்டர்களை விலக்கிவிட்டனர்; தடியடி நடக்கவில்லை. தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது. 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு" எனத் தெரிவித்தார்.

விஜய் வெளியிட்ட வீடியோ

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

"பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை; என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை0

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்; இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம்

சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன்"

கரூர் துயரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

100% அரசியல்

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “மூன்று நாட்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக பேசியிருக்கிறோம். இந்த காணொளியில் அவர் தரப்பு நியாயத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட முக்கியமாக முதலமைச்சரை நோக்கி அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது மொத்த சூழலையும் மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த நேரத்தில் இது தேவையற்ற விமர்சனம். மிகப்பெரிய வேதனையில் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. தவெக தரப்பில் இருந்தே சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்கள். எதற்குமே முடிவு வராத சூழலில், என்னைப் பழி வாங்க வேண்டுமென நினைத்தீர்கள் என்றால் நான் வீட்டில்தான் இருப்பேன் என்பது தன் தரப்பு தொண்டர்களை தூண்டி விடக்கூடிய தன்மைதான். 100% விஜய் இதை அரசியல் ஆக்குகிறார். இது தவறான முன்னுதாரணம். விஜய் எனும் தனி மனிதனை நம்பி வந்த பெருங்கூட்டத்தின் இழப்பில் அரசியல் செய்வது என்பது அபத்தமானது நேரடியாக திமுக தலைமை மீது இந்த விமர்சனத்தை முன் வைக்கிறார்.

எல்லோரும் அமைதியாக இருப்போம்.. உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று சொல்லவருவது வரை சரிதான். ஆனால், அரசியல் நெடி அதிகமாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

அபத்தம் தரும் வீடியோ

அரசியல் விமர்சகர் செந்தில்வேல் இதுதொடர்பாகப் பேசுகையில், "விஜய் வெளியிட்டது விளக்கம் தரும் வீடியோ அல்ல. அபத்தம் தரும் வீடியோ. 40 பேரின் மரணம் எவ்வளவு அதிர்ச்சியோ அதைவிட பேரதிர்ச்சி விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ. மதுரையில் ஒரு நபர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்குபேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது என்பது ஊடகங்களில் வெளிவந்த செய்தி. எனவே கரூரில் மட்டும் நடக்கவில்லை. கரூரில் நிலைமை சற்று கைமீறி சென்றுவிட்டது. குறைந்தபட்சம் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டாமா? உங்களுடைய தொண்டர்கள்தானே. நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். யார் உங்களைப் பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

சரியான அணுகுமுறை இல்லை

பத்திரிகையாளர் ப்ரியன்
பத்திரிகையாளர் ப்ரியன்புதிய தலைமுறை

பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "தொண்டர்களை சமாதானப்படுத்த இம்மாதிரியான வீடியோவை வெளியிட்டிருப்பதாகப் பார்க்கிறேன். என்மேல் என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுங்கள் என்பது மக்களிடம் சிம்பதி கொண்டுவர முயற்சி செய்வதுபோல் இருக்கிறது. அவர்தான் கட்சியின் தலைவர். அவருக்காகதான் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில்தான் இம்மாதிரியான அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது விஜயின் கடமை. எனவே இந்த சூழலிலும் அனுதாபம் பெறுவதற்காக இப்படி பேசுகிறார். இது சரியான ஆளுமைக்கு அழகல்ல" எனத் தெரிவித்தார்.

விஜய் பேசியது என்ன?

என்னுடைய வாழ்க்கையில் இது மாதிரியான வலிநிறைந்த சூழ்நிலையில் இருந்ததே கிடையாது. மனது முழுக்க வலி. இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்ன பார்க்க வராங்க... அதுக்கு ஒரே ஒரு காரணம் தான்... அவங்க ஏன் மேல வச்சிருக்க அன்பும் பாசமும் தான். அந்த அன்புக்கும் பாசத்துக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அதனாலதான் இந்த சுற்றுப்பயணத்தில எல்லா விஷயத்தையும் தாண்டி மக்களுடைய பாதுகாப்பு மட்டும் மனசுல வச்சிட்டு தான் அதுக்கான இடங்கள காவல்துறையில் கேட்டோம். ஆனால் நடக்ககூடாதது நடந்திருச்சு... நானும் மனுஷன் தான... அந்த நேரத்தில் அந்தன பேரு பாதிக்கப்பட்டிருக்கும் போது அப்படியே விட்டுட்டு வர முடில... நான் திரும்ப போகனும்னு 20 நிமிஷம் காத்திருந்தேன்... அத காரணம் காட்டி வேற சில அசம்பாவிதங்கள் நடந்திற கூடாதுன்னு தான் நான் திரும்பி வந்துட்டேன்.

இந்த நேரத்தில சொந்தங்கள இழந்து தவிக்கிற அனைத்து குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தெரியும்.. என்ன சொன்னாலும் ஈடாகாதுன்னு எனக்கு தெரியும்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிற எல்லாரும் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்க எல்லாரையும் சீக்கிரம் வந்து சந்திக்கிறேன்.

இந்த நேரத்தில எங்களுடைய வலிகளை புரிஞ்சிகிட்டு எங்களுக்காக பேசுன அரசியல் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 மாவட்டத்திற்கு போய் இருக்கேன். எங்கேயும் இப்படி நடக்கல கரூர்ல மட்டும் ஏன் இப்டி நடக்குது... மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூரை சார்ந்த மக்கள் வந்து உண்மையெல்லாம் சொல்லும் போது கடவுளே நேர்ல வந்து சொல்ற மாதிரி இருக்கு...

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.. எனக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க போய் பேசிட்டு வந்தோம்.. நாங்க எந்த தவறும் பண்ணல .. ஆனால் எங்க கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மேல வழக்குப்பதிவு செய்திருக்கீங்க....

சிஎம் சார் உங்களுக்கு எதாவது பழி வாங்குற எண்ணம் இருந்த என்ன என்னவேணா பண்ணுங்க... அவங்க மேல கை வைக்காதீங்க,.. நான் வீட்ல இருப்பேன்.. இல்ல அலுவலகத்தில இருப்பேன்... என்ன என்ன வேணா பண்ணுங்க...

நம்முடைய அரசியல் பயணம் இன்னும் தீவிரமா தொடங்கும்... நன்றி

விஜய் பேசியதில் விடுபட்டுப்போனவை..

விஜய் பரப்புரைக்கு ஏன் தாமதமாக வந்தார் என்பதுதான் சமூக வலைதளங்களில் பலராலும் முன்வைக்கப்பட்ட விமர்சனம்.. ஆனால் இன்று விஜய் வெளியிட்ட வீடியோவில் தான் ஏன் தாமதமாக வந்தேன் என்பதை எங்குமே வெளிப்படுத்தவில்லை.

விஜய் அந்த இடத்திற்கு வந்தால் இன்னும் விஷயங்கள் சிக்கலாகும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் ஏன் கட்சியின் அடுத்தமட்ட தலைவர்கள் அந்த இடத்திற்கு வரவில்லை என்பதை அந்தக் காணொளியில் விஜய் விளக்கவில்லை.

5 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன் அங்கு எங்கும் இப்படி நடக்கவில்லை என்கிறார் விஜய்.. ஆனால், கூட்ட நெரிசலில் மயக்கமடைந்தவர்கள், விக்கிரவாண்டி, நடந்த உயிரிழப்புகள் தொடர்பாக நடந்த விஷயங்களை அவர் மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை.

இப்படி ஏகப்பட்ட விஷயங்களுக்கு பதில் சொல்லாமல் விஜய் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்

இடம் தேர்வு குறித்து: வேண்டுமென்று வேலுசாமிபுரம் பகுதியை குறுகலான காவல்துறை ஒதுக்கியதா? சில ஊடகங்களில் அது குறுகிய சந்து என்று வெளியிட்ட கருத்துக்கள் சரியா? பரந்த இடங்கள் இருந்தும் மக்கள் நெரிசலை ஏற்படுத்தக்கூடிய இடம் வழங்கப்பட்டதா?  எனும் கேள்விக்கு அமுதா ஐஏஎஸ் பதிலளித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “முதலில் தவெக தரப்பினர் 7 இடங்களை தேர்ந்தெடுத்து அனுமதி வேண்டி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறையினரும் தவெக தரப்பினரும் கலந்தாலோசித்து 25 ஆம் தேதி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதே தேதியில் எதிர்கட்சியினர் ஒரு பரப்புரைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த சிரமும் இல்லாமல் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கஷ்டப்படாமல் கூடியிருக்கிறார்கள். 26 ஆம் தேதி தவெக தரப்பினர் பரப்புரைக்கு வேலுச்சாமிபுரம் வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்கள்.

முதலில் ரவுண்டனா பகுதியைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெட்ரோல் பல்க் மற்றும் அமராவதி பாலம் இருந்தது. எனவே கூட்ட நெரிசல் ஆனது என்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் காவல்துறை தரப்பில் இருந்து அந்த இடம் ஒதுக்கப்படவில்லை.

அடுத்தது உழவர் சந்தை. 30 அடிமுதல் 40 அடி சாலை கொண்டது. தற்போது கொடுக்கப்பட்ட சாலை ஏறத்தாழ 60 அடி அகலம் கொண்டது. எனவேதான் வேலுச்சாமிபுரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அதிகளவில் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். இதை முன்கூட்டியே கணிக்கமுடியவில்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்கள் கொடுத்த கடிதத்தில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரை வருவார்கள் எனக் கணித்து செயல்பட்டிருக்கிறார்கள். 50 பேருக்கு ஒரு காவலர் என்பதுதான் சாதாரண நடைமுறை.. ஆனால், இந்த சம்பவத்தில் 20 பேருக்கு ஒரு காவலர் என்றுதான் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது என்ற செய்தி குறித்து

பரப்புரையின்போது மின்சார தடை ஏற்பட்டதா என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக முன்பே அரசு அதிகாரிகள் விளக்கமளித்து இருக்கிறார்கள்.

காவலர்கள் தடியடி நடத்தினார்களா என்று கேட்கிறார்கள்

ஏற்கனவே பரப்புரை நடக்கும் இடத்தில் அதிகமான கூட்டம் இருக்கிறது. கட்சியின் தலைவர் அப்பகுதிக்கு வரும்போது அவருடன் வந்த கூட்டமும் அப்பகுதியில் இணைகிறது. அப்போது டிஎஸ்பி, வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே நிறுத்தச்சொல்லியிருக்கிறார். ஆனால், அக்கட்சியினர் கேட்கவில்லை. அப்போது அங்கிருக்கும் கூட்டத்தை காவல்துறையினர் முன்னாள் நகரச் சொல்கிறார்கள்.

பரப்புரை தொடங்குவதற்கு முன்பே நெரிசல் நடந்ததா?

12 மணிக்கு அவர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வரவேண்டும். கூட்டம் மதியத்தில் இருந்தே அப்பகுதியில் அதிகளவில் கூட ஆரம்பித்துவிட்டனர். 3 மணியில் இருந்து கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் இருந்து காத்திருப்பவர்களும் அப்பகுதியில் இருக்கிறார்கள். அவர் வரும்போது அவருடன் வந்தவர்களும் இருக்கிறார்கள். அதோடு அவரது வாகனம் பெரிய வாகனம். அவரது வாகனம் முன் செல்லச் செல்ல கூட்டத்தினர் இட வல புறங்களில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். பின்னால் இருந்தவர்களும் அவர் பேசுவதைக் கேட்க முன் வருகின்றனர்.. அப்போதுதான் நெரிசல் ஆகிறது.

பரப்புரை கூட்டதின்போது எதற்கு ஆம்புலன்ஸ் வந்தது

ஆம்புலன்ஸைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறது, கரூரில் மொத்தம் 19 ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. பரப்புரை நடந்த இடத்தை சுற்றி மூன்று இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் தொடர்பாக முதல் போன் வந்தது 7.14 நிமிடத்திற்கு. 7.20க்கு அங்கு ஆம்புலன்ஸ் சென்றது. இரண்டாவது போன் 7.15க்கு வந்த நிலையில், 7.23க்கு ஆம்புலன்ஸ் சென்றது. தவெக சார்பில் 7 ஆம்புலன்ஸ்கள்.. தமிழ்நாடு அரசின் சார்பில் 6 108 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலில் அதிகமானோர் பாதிகப்படுகிறார்கள் எனத் தெரிய ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com