பிப்.24ல் விஜய் மல்லையா நேரில் ஆஜராக உத்தரவு

பிப்.24ல் விஜய் மல்லையா நேரில் ஆஜராக உத்தரவு
பிப்.24ல் விஜய் மல்லையா நேரில் ஆஜராக உத்தரவு

பிப்ரவரி 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென கடன் ஏய்ப்பாளரான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான கடன் ஏய்ப்பு வழக்கை 2017 முதல் விசாரித்த உச்ச நீதிமன்றம், பலமுறை உத்தரவிட்டும் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் லண்டன் தப்பிச் சென்று விட்ட நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு பிரிட்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கில் நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com