விஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..!

விஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..!
விஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..!

‘சர்கார்’ பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தீபாவளியன்று வெளியானது. இதனையடுத்து படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர்.

அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த காரணத்தை முன்வைத்து, தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலையே உருவானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்தது.

இதனிடையே விஜய் ரசிகர்களோ ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு ஆதரவாக தங்களது வீடுகளில் உள்ள தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரியும் தீயில் போட்டு கொளுத்தினர். இதுதவிர இளைஞர்கள் இருவர் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ‘சர்கார்’ பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 23452348, 23452350 என்ற எண்களில் மக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com