\
சரமாரி அடி- வைரலாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ

சரமாரி அடி- வைரலாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ

சரமாரி அடி- வைரலாகும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் 2 பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும், 4 வீடியோக்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் குற்றவாளி இருவரை பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சபரி, மற்றும் திருநாவுக்கரசு ஆகிய குற்றாவாளிகளை தாக்கி வீடியோ குறித்து விசாரிக்கப்படுவதும், அதில் பல பெண்களை வீடியோ எடுத்திருப்பதாக குற்றவாளிகள் ஒப்புக்கொள்வதும் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலமான இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com