\
வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி மருத்து‌மனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோ ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. தொலைக்காட்சிகளிலும் அந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வெற்றிவேல் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் புதிதாக உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில் வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com