வேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை 

வேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை 

வேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை 
Published on

வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் மின்னனு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 அறைகளில் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

ஏ.சி.சண்முகம், கதிர் ஆணந்த், தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேலூர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதற்கான முன்னிலை நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com