கிரைண்டர் சுவிட்சை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

கிரைண்டர் சுவிட்சை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

கிரைண்டர் சுவிட்சை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
Published on


காட்பாடி ரயில்வே கேண்டினில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கிரைண்டர் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் சிற்றுண்டி உணவகம் ஒன்றில் பணிபுரிந்தவர் சபேஷ். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவர், கிரைண்டரில் தக்காளி அரைத்துள்ளார். அப்போது கிரைண்டரை நிறுத்த சுவிட்சில் கைவைத்த அவர், தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சபேஷை மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சபேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயிவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com