பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் முரளிகிருஷ்ணன் என்பவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததோடு தனியாக வீட்டிற்கும் அழைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தற்கொலைக்கு முயன்று தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் முரளிகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் திருவலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் இது போன்று நடக்காத வண்ணம் தலைமையாசிரியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது போன்ற செயல்களை கண்டறியும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com