பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரி: போலீஸிடம் ஒப்படைத்த வேலூர் எம்.பி

பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரி: போலீஸிடம் ஒப்படைத்த வேலூர் எம்.பி
பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரி: போலீஸிடம் ஒப்படைத்த வேலூர் எம்.பி

பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் வேலூர் எம்.பி. ஒப்படைத்தார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று காலை சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகே அவருடைய காருக்கு முன்பு பெரிய டாரஸ் லாரி ஒன்று நொறுங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

முன்னால் சென்ற லாரியில் இருந்து வித்தியாசமான பொருள் ஒன்று ரோட்டில் சிதறியதோடு, லாரிக்கு பின்புறம் வருபவர்கள் மீது விழுவதை கவனித்த எம்.பி கதிர் ஆனந்த், அந்த லாரியை முந்திச் சென்று மடக்கி டிரைவரிடம் விசாரித்தார். அப்போது அந்த லாரியில் நொறுங்கிப்போன கண்ணாடித் துகள்கள் இருப்பதை கண்ட எம்.பி கதிர் ஆனந்த் லாரியை சத்துவாச்சாரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com