வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக முன்னிலை!

வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக முன்னிலை!
வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக முன்னிலை!

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.

வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  

4 வது சுற்று முடிவுபடி, அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 72,370 வாக்குகளும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 66190 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீப லட்சுமி 2,791 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com