இறந்த கணவரின் உடலருகே உயிர்விட்ட மனைவி; ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்!

இறந்த கணவரின் உடலருகே உயிர்விட்ட மனைவி; ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்!
இறந்த கணவரின் உடலருகே உயிர்விட்ட மனைவி; ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்!

வேலூரில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியையடுத்த கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (வயது 65). இவரது மனைவி அஞ்சலி (வயது 60). இவர்களுக்கு இரண்டு ஆண் மகன்கள் மற்றும் மகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் சேகர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதில் அவர் நேற்று உயிரிழந்தார். கணவரின் இறப்பில் மனைவி அஞ்சலி அதிர்ச்சியிலேயே இருந்துள்ளார். கணவர் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணவர் சேகரின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அஞ்சலியின் உடலும் அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது.

மேலும் கணவன் உயிரிழந்த துக்கம் தாலாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com